ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
    அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
    சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
    தங்க இருப்பத் தலைவனு மாமே. 
  • 2. ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
    டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
    சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
    பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 
  • 3. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
    அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
    உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப்
    பரிசு பெறுமது பத்திரா சனமே. 
  • 4. ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
    முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
    தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
    குக்குட ஆசனங் கொள்ளலு மாமே. 
  • 5. பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
    ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
    கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
    சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
  • 6. பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
    சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
    உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
    பத்தொடு நூறு பலஆ சனமே.