ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
    ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
    வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
    தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.
  • 2. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
    தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
    ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
    வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 
  • 3. செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
    இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
    ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
    டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.
  • 4. மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
    ஏறி இழியும் இடைபிங் கலையிடை
    ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
    தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே. 
  • 5. உதித்து வலத்திடம் போகின்ற போது
    அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
    உதித்தது வேமிக ஓடிடு மாகில்
    உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.
  • 6. நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
    அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
    யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
    முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.