ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
    காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
    காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
    காதல் வழிசெய்து காக்கலு மாமே. 
  • 10. சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
    நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
    சாதன மாகுங் குருவை வழிபட்டு
    மாதன மாக மதித்துக்கொ ளீரே. 
  • 11. ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
    பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
    நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
    பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. 
  • 12. ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
    நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
    தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
    மாசறு சோதி வகுத்துவைத் தானே. 
  • 2. காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
    காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
    காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
    காக்கலு மாகுங் கருத்துற நில்லே
  • 3. நிலைபெற நின்றது நேர்தரு வாயு
    சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
    கலைவழி நின்ற கலப்பை அறியில்
    மலைவற வாகும் வழியது வாமே. 
  • 4. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
    மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
    சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
    விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே. 
  • 5. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
    பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
    ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
    தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே. 
  • 6. சாதக மானஅத் தன்மையை நோக்கியே
    மாதவ மான வழிபாடு செய்திடும்
    போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
    வேதக மாக விளைந்து கிடக்குமே. 
  • 7. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
    நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
    படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
    தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே. 
  • 8. தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
    ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
    வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
    தேனே பருகச் சிவாலய மாகுமே.
  • 9. திகழும் படியே செறிதரு வாயு
    அழியும் படியை அறிகிலர் ஆரும்
    அழியும் படியை அறிந்தபின் நந்தி
    திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.