ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
    உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
    கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
    கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.
  • 2. பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
    பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
    பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
    பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.
  • 3.  `அங்குசம்` என்ன எழுமார்க்கப் போதத்தில்
    தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
    சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
    பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.
  • 4. ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
    காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
    மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
    ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.
  • 5. சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
    முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும்
    சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும்
    சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.
  • 6. மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
    தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
    தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
    ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.