ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து

பதிகங்கள்

Photo

பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.

English Meaning:
The Dances of Siva, Eight and Five — Witnessed in Six Adharas

Kodukkotti, Pandarangam, Kodu, Samharam and others,
—These Eight dances1 He danced,
The Five dances too He danced,
All these you witness in the Nadis (Adharas) six;
In the yogic way;
He danced too in the forests of Deva-daru2,
And in Tillai3 and in Alavanam4
—He the King Supreme.
Tamil Meaning:
எல்லாவற்றையும் வியாபித்து நிற்றலால் சுத்த மாயை யின் வியாபகம் பரமாண்டம் ஆகும். அதற்குள்ளே உள்ள அனைத்து இடங்களிலும் பராசத்தியின் கூறாகிய ஆதி சத்தி பரவியுள்ளது. ஆகவே அந்தச் சத்தயைத் தனது விரிந்த ஒளியாகக் கொண்ட தடத்த சிவன், அவ்விடங்களில் எல்லாம் உளன். அவையேயன்றிச் சுத்தமாயையின் காரியமாகிய வாக்குக்களும் `அதிசூக்குமம், சூக்குமம், தூலம்` என்னும் வகையில் அந்த எல்லா இடங்களிலும் உள்ளன. ஆகவே, அந்த எல்லா இடங்களிலும் சிவன் தனது சுந்தரக் கூத்தினைச் செய்கின்றான்.
Special Remark:
முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உள்ளது, உளன், உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. மூன்றாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பதும் உடன் எஞ்சி நின்றது. நாதம் இல்லையேல் பொருள் விளங்காமை பற்றி அதன் இருப்பையும் உடன் கூறினார். நடம், அதிகாரத்தால் இங்கு நடைபெறுமாறு கூறப்பட்டடது.