ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து

பதிகங்கள்

Photo

 `அங்குசம்` என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.

English Meaning:
Siva Dances Through Cosmos

At the crest of Cosmos of galaxies vast (Paramandam)
Are the Holy Feet of Parasakti;
At the crest of Cosmos
Is the radiant Light of Isa
Permeating the Cosmos
Is the expansive Nada;
There through the Cosmos vast
Does the Paran dance unceasing;
Tamil Meaning:
(`அம்சம்` என்பதை இடையே குகரச் சாரியைக் கூட்டி, `அங்குசம்` என ஒரு கருவியின் பெயர்போல ஆக்கி மறை பொருட் கூற்றாக வழங்குதல் சித்தர் மரபு. எனவே,) அங்குசம் என்ன எழும் மார்க்கம்` என்பது, `அம்சம்` என எழுகின்ற வழி என்பதாம். இம்மந்திரம் இரேசக பூரகமாய் நிகழும் வாயு இயக்கத்தால் இயல்பாக நிகழ்தலின் `அசபா மந்திரம்` எனப்படும். அம்மந்திரவழி இயங்கும் உயிர்ப்பினாலே அறிவு நிகழ்தலி அவ்வாற்றால் அறிவை விளக்கு கின்ற இறைவனது செயல் `அசபா நடனம்` எனப்படுகின்றது. அந்த நடனத்திற்கு, `அம், சம்` என்பனவே, `தொம், தி` என ஒலிக்கின்ற தாளங்களாம். அந்தத் தாள ஒற்றுக்கு இயையச் சிவன் சுழுமுனை நாடிக்குள் நின்று சுந்தரக் கூத்து ஆடுதலை அறிவு விளங்கிய காலத்தில் தொடங்குகின்றான். ஆயினும் அக்கூத்தினை அவன் முடித்துவிட்டு அப்பாற்போதல் இல்லை.
Special Remark:
போதம் - அறிவு. மூல நாடி, சுழுமுனை நாடி. தரித்தல் - தங்குதல். அறிவு விளங்குதல், குரு உபதேசத்தால் அசபா நடனத்தை அறியப் பெறுதல்`. ``புகுதல்`` எனப் புதிதுபோலக் கூறியது, அறிவுக்குப் புலனாகும் காலம் பற்றி. விளங்கிய அறிவு பின் விளக்கம் அற்று மறவாமை பற்றி, ``போதல் இல்லை`` என்றார். அசபா நடனத்தால் இங்ஙனம் அறிவு விளங்கச் செயதல் ஐந்தொழில் நடனத்தில் `அதிசூக்கும நடனம்` எனப்படும். எனவே, இதுவும் சுந்தரக் கூத்தின் வகையாயிற்று.
இதனால், சுந்தரக் கூத்த வகைகளுள் ஒன்றன் இயல்பு கூறப்பட்டது.