ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
    பேரறி வாளன் பெருமை குறித்திடில்
    ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
    தாரணி நால்வகைச் சைவமு மாமே.
  • 2. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
    சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
    சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
    நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.
  • 3. கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
    முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
    சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
    தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.
  • 4. வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
    நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
    பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
    நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.