ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்

பதிகங்கள்

Photo

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

English Meaning:
Suddha Saivam is Saiva Siddhanta

Having learned all that learned must be,
Having practised all Yoga that have to be,
They, then, pursue the path of Jnana in gradation sure;
And so pass into the world of Formless Sound beyond;
And there, rid of all impurities,
Envision the Supreme, the Self-created;
They, forsooth, are the Saiva Siddhantins true.
Tamil Meaning:
கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்திகளையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிரபரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத் திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர்.
Special Remark:
``சை சித்தாந்தர்`` என்றது `சித்தாந்த சைவர்` என்றவாறு. எனவே, `சைவாகம நெறிகளின் வழி ஒழுகி, அதனால், பதமுத்தி, பரமுத்திகளை அடைவதே சித்தாந்த சைவம்` என்றதா யிற்று. ஆகவே, சித்தாந்த சைவமே மேற்கூறிய சுத்த சைவமாதல் பெறப்பட்டது. ``மெய்யோகம்`` என்றது, `பொருளுணர்வுக்குக் காரணமான நாதத்தையுணரும் யோகம்` என்றவாறு. முற்பதம் - முதற்சொல்: பிரணவம்.
இதனால், `சித்தாந்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.