
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்
பதிகங்கள்

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.
English Meaning:
Suddha Siddhanta is VedantaSuddha Siddhanta is Vedanta;
They who have scaled the heights of Nada sphere
Have verily had the Vision Unwavering
Comprehending Tattvas from world of elemental matter
To the Finite End of Jnana (Bhodanta)
They become Perfection in Nadanta,
They verily are the ardent seekers of Jnana.
Tamil Meaning:
வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர்.Special Remark:
`சுத்தமாய்` என ஆக்கம்வருவிக்க. `சித்தாந்தத்துக்கண் நின்று கண்டோர்` என்பதில் இடைநின்றன தொக்கன. ``பூதம்``, ஏனைத் தத்துவங்கள் பலவற்றிற்கும் உபலக்கணம். தத்துவங்களின் அந்தத்தில் உள்ள போதம், `நான்` என்னும் பசுபோதம். அஃது அந்தமாதலாவது, நீங்குதல். புனம்செய்தல் - புனத்தைத் திருந்தச் செய்தல் போலச் செய்தல். ஞான நேயம் - ஞானத்தினால் பற்றப்படும் ஞேயம் `வேதாந்தம் தெளிவாதல் சைவ சித்தாந்தத்திலே` என்பதை, ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` 1 என்பதனால் அறிக.இதனால், சித்தாந்த சைவத்தின் சிறப்பும், அதன்கண் நின்றாரது பயனும் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage