ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
    சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால்
    ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந்
    துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.
  • 2. கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
    அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
    விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்(து)
    அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.
  • 3. தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
    தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
    தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன்
    தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.
  • 4. தெய்வச் சுடர்அங்கி ஞாயிறுந் திங்களும்
    வையம் புனல்அனல் மாருதம் வானகம்
    சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
    ஐவர்க் கிடம்மிடை ஆறங்க மாமே.