ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
    கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
    மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
    பார்போக மேழும் படைத்துடை யானே. 
  • 2. சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
    சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
    மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
    தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே. 
  • 3. கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
    கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
    கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
    கூறது செய்து தரித்தனன் கோலமே.
  • 4. தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
    தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
    சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
    வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே.