ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு

பதிகங்கள்

Photo

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 

English Meaning:
At the crescent-decked head of Veerabhadra
That destroyed the depraved sacrifice of Daksha,
Damodara aimed his discus;
And then the doughty Lord sent forth a sneeze;
And lo! A gusty tempest blew
And down fell discus powerless against God Supreme.
Tamil Meaning:
தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.
Special Remark:
இவ்வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க. `வட்கி` என்பது திரிந்து நின்றது. உமிழ்தலுக்கு, `வலிமை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. வாய் உக்கிரம், உங்காரம்.
இதனால், சிவபெருமானது ஆற்றற் சிறப்பு அவ்வாற்றானே கூறப்பட்டது.