ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
    திருவருங் கோவென் றிகல இறைவன்
    ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
    அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 
  • 2. அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
    தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
    டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
    அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.
  • 3. தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
    எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
    விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
    கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 
  • 4. சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
    அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
    திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை
    மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. 
  • 5. பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
    கண்பழி யாத கமலத் திருக்கின்ற
    நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
    விண்பழி யாத விருத்திகொண் டானே.