ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
    ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
    சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
    காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 
  • 2. கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
    வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
    முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
    வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.
  • 3. ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
    போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
    கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
    சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 
  • 4. முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
    மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
    கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
    என்னரு நந்தி எடுத்துரைத் தானே. 
  • 5. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
    போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
    பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
    சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.