ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்

பதிகங்கள்

Photo

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 

English Meaning:
Rains fail; epidemics spread;
The mighty king his prowess loses;
All this sure happens,
If worship in Lord`s temples falters,
—The Lord who spurned the very God of Death.
Tamil Meaning:
சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புநாள் விழாக்கள் முதலியவை இல்லாதொழியினும், ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி நடப்பினும், நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப்போக, சிற்றரசரால் வணங்கப்படுகின்ற பேரரசர்களும் பகைவரை வெல்லும் வலியிலராய்த் தம் நாட்டை இழப்பர்.
Special Remark:
ஆதலால், அரசர் தம் நாட்டில் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் செவ்வனே நடைபெறச் செய்தலைத் தம் தலையாய கடமையாகக் கொள்ளல் வேண்டும் என்பதாயிற்று. ``அவனி`` என்றது, அக்கோயிலில் உள்ள நாட்டைக் குறித்தது. ``பூசை`` என்றது நைமித்திகத்தையும் அடக்கியேயாம். \"மழை குன்றும்\" என்பதும் பாடம்.