ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
    பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
    சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
    காலங் கழிந்த பயிரது ஆகுமே. 
  • 2. ஈவது யோக இயம நியமங்கள்
    சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
    ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
    கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே. 
  • 3. ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
    தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
    காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
    போமா நரகில் புகான்போதங் கற்கவே.
  • 4. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
    அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
    எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
    நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே.