ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்

பதிகங்கள்

Photo

சிவாய நம`எனச் சித்த ஒருக்கி
அவாய3ம் அறவே அடிமைய தாகிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

English Meaning:
Bliss From Si Va Ya Siva Siva

Saying Si Va Ya Na Ma,
Centre your thoughts,
All perils your vassals will be;
Let the words Si Va Ya Siva Siva
Fill your thoughts unceasing;
Conquering all perils,
Bliss there shall be.
Tamil Meaning:
சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்லும். அதனால் ஆன்மாத் தான் சிவனுக்கு ஆளாகி வினையாகிய தீங்கினின்றும் நீக்கும். அப்பால் அதி சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்ம அறிவு பாசஞானமாகிய தீங்கில்லதாம். அப்பால் காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாப் பசு போதம் நீங்கிச் சிவபோதம் பெற்றுப் பிறப்பாகிய தீங்கினின்றும் நீங்கும். அப்பால் மகாகாரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாச் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும் ``என்று என்று`` என்னும் அடுக்கினுள் முன்னதைச் ``சிவாய`` என்பதனோடு கூட்டி, `அவாயம் அறநிற்க` என ஒருமுறையும் பின்னர் நிற்கும் ``என்று`` என்பதனை ``அவாயம்கெட`` என்பதனோடு மற்றொரு முறையும் முடிக்க. ``அவாயம்`` என்பது ஏற்ற பெற்றியால் பொருள் தந்தது. ``நிற்க`` என்பதன்பின், `பின்னர்` என ஒரு சொல் வருவிக்க. அதனால், `ஆனந்தம் ஆதல் ஓரெழுத்து மந்திரத்தால்` விளங்கிற்று. ``ஆம்`` என்றது `விளையும்` என்றபடி.
Special Remark:
இதனால், உலகியலைத் தரும் தூல பஞ்சாக்கர் நீங்க, மற்றைய நால்வகைப் பஞ்சாக்கரத்தின் பயனும் ஒருங்கு தொகுத்துக்கூறப்பட்டன.