ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி

பதிகங்கள்

Photo

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நினைவு மிகுத்த நனா கனா
ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

English Meaning:
Final Goal is in Sushupti-Beyond Experiences

Without Caused Experiences six times six leaving,
Without Jagrat, Svapna and other states of Turiya
Jagrat Waking leaving,
Without entering that Sushupti State
That is beyond Tattvas six times six,
What avails it
If of Tvam Pada Jiva speaks?
He on earth will never, never,
The Final Goal reach.
Tamil Meaning:
தத்துவங்களுக்குள்ளே சில காரியமும், சில காரணமும் ஆதல் பற்றி அவற்றை, `காரியம், காரணம்` எனப் பிரித்துக் கூறினாலும் தத்துவங்கள் அனைத்திற்கும் மாயையே காரணமாகத் தத்துவங்கள் அவற்றின் காரியம் ஆதல் பற்றி அவை அனைத்தையும் இங்கு ``காரியோபாதி`` என்றார். ``நனவு`` என்றது சகல சாக்கிரத்தை. அதன்கண் நிகழும் `நனவு, கனவு, உறக்கம்` என்பவற்றில், இவற்றிற்கு முன் நிலைகளில் எல்லாம் கிடைக்கப்பெறாத பேறு கிடைக்கப் பெறுகின்ற துரிய நிலையை அடைந்த பொழுதுதான் உயிர் உண்மையில் `துவம்` பதப் பொருளாகும்.
Special Remark:
`நினைவு வேறாய்` என மாற்றியுரைக்க. நினைவு - உணர்வு. ``மிகுத்த`` என்றதனால், நின்மலமாதல் குறிக்கப்பட்டது. எனவே, இங்குக் கூறப்பட்ட நனவு முதலியன நின்மல சாக்கிரம் முதலியவாயின ஆகவே, `இங்குக் கூறப்பட்ட உபாதிகள் நின்மலாவத்தையில் நீங்கும்` என்றதாயிற்று. நிலம், துரியம், ஆதல் - கிடைத்தல். `ஆம் நிலம்` என்க. உபாதி நீங்கிய நிலையே உயிர்க்குத் தூய்மையாதலின் `அது தொம்பதப் பொருளாம்` என்றார். ``பதம்`` என்பது சொல்லாகு பெயராய் அதன் பொருளைக் குறித்தது.
இதனால் உபாதிகள் நீங்கும் இடம் கூறப்பட்டது.