ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி

பதிகங்கள்

Photo

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

English Meaning:
All Attainments, Work of Lord

Siddhi and Mukti,
And Suddhi that is Siva Pure,
And Sakti of Pure Bliss,
That extinguishes the Fires Three;
And the Samadhi Exalted
—All these the work of Divine Lord
Who thine bonds sunders.
Tamil Meaning:
பக்குவான்மாக்கட்குப் பாசத்தை அறுத்துத் தன்னையே அளிப்பதாகிய சித்தாந்த முத்தியைத் தருகின்ற, பெரிய பெருமானாகிய (மகாதேவனாகிய) சிவனே ஏனையோர்கட்கு அவரவர்களது தகுதிக்கு ஏற்ப, பொது யோகிகள் விழைகின்ற அணிமாதி அட்ட மாசித்தியாகிய பயனையும், ஏனைச் சமயத்தார் தாம் தாம் `முத்தி` எனக் கொண்டு விழைகின்ற பல்வேறு பயன்களையும், அகப்புற, அகச்சமயிகள் விழையும் பொதுநிலைச் சிவபதமாகிய பயனையும், இப்பயனுக்கு எதிராய் உள்ள `தாபத் திரயம்` எனப்படும் மூவகைத் துன்பங்களைப் போக்கிக் கொள்கின்ற ஆற்றலையும், சிவயோகிகள் விரும்புகின்ற அந்தமேலான சமாதியாகிய சீவன் முத்தியையும் தருபவனாவான்.
Special Remark:
`சிவன் முத்தி தரும் பெருமான்` என்பதே பற்றி, அவன் தன்னையளிப்பதாகிய அந்தப் பரமுத்தி ஒன்றைத் தான் தருவான் போலும்` என மயங்கி யுரைக்கும் பல்வேறான வழக்குரைகளால் மாணாக்கர் மயங்காமைப் பொருட்டு, `அனைத்துப் பயன்களையும் தருபவன் சிவன் ஒருவனேயன்றிப் பிறர் ஒருவரும் இல்லை` என்பதை விளக்கினார். `முத்தியைத் தரும் பெருமான், அதற்குக் கீழ்ப்பட்ட ஒன்றையும் தர வல்லனல்லன்` என்றல், தன்னைச் சார்ந்தவர்க்குக் காணியும், மனையும், மாடமும், மாளிகையும், ஊரும், நாடும் வழங்கவல்ல அரசனுக்குப் பரிசிலர் வேண்டும் பொன்னும், பூடணமும், யானையும், குதிரையும், தேரும் போல்வனவற்றைத் தருதல் இயலாது` எனக்கூறுவாரது கூற்றோடு ஒக்கும் என்பதாம். `சிவன்அ முத்தியைத் தருபவன்` என்பதற்கு, `ஏனைப் பயன்களை ஏனைத் தேவரிடத்தும் சென்று பெறுதல் கூடும்; பிறவியற்ற பெருநிலையாகிய முத்திப் பயனைச் சிவன் ஒருவனிடத்தில் பெற முடியும்` என்பதே கருத்தாகலின், அஃதறியாது, சிவன் முத்தியைத் தவிர வேறு ஒன்றையும் தர மாட்டுவானல்லன் என்பார்க்கு நாம் என் கடவோம் என்பது கருத்து. `சிவனலால் முத்தியில் சேர்த்துவார் இலை``* என்னும் காஞ்சிப்புராணத்தையும் காண்க.
`பிற சமயிகள் விழையும் முத்தி` என்றதனால் உலகாயதர் விழையும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அடங்கின. `பிற பயன்களையும் தேவர் பிறர் அளித்தல் சிவனது ஆணையைப் பெற்றே` என்பது மேலேல்லாம் விளக்கப்பட்டது ஆதலின், பிறர்தேவர் தரும் பயன்களும் அவர்தாமே சுதந்திரராய் நின்ரு தருவன அல்ல என்பது விளங்கும்.
மூவகைத் துன்பங்களாவன `ஆதியான்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம் என்பன. இவை முறையே, தன்னாலே தனக்கு வருவது (`தான்` என்பது தன் உடம்பையும் சேர்த்தே), ஐம் பெரும் பூதங்களால் வருவது, பிற காரணங்களைக் கருதாது, ஊழே காரணமாகக் கருத வருவது என்பனவாம். இவ்வாறு ஞானா மிர்தத்தில்l சொல்லப்பட்டது. பரிமேலழகர், `ஆதி பௌதிகம்` என்பதைப் பிற உயிர்களால் வருவனவாகக் கூறினார்.8 ``சுத்தி`` என்றது `குற்றம் அற்றதாகிய முத்தி` என்றபடி. தரும் பெருமானைத் தரப்படும் பயனாகவே உபசரித்துக் கூறினார்.