ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
    எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
    எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
    துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. 
  • 10. தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
    தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
    தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
    தாரகைத் தாரகை தானாம் சொரூபமே. 
  • 11. முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
    பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
    அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
    செப்பரி யான்கழல் சேர்தலு மாமே. 
  • 12. அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
    தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
    பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
    திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே. 
  • 13. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
    நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
    கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
    சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 
  • 14. அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
    அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
    அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
    தங்கி அதுவே சகலமு மாமே. 
  • 15. ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
    பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
    நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
    ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. 
  • 16. காணும் பரிதியின் காலை இடத்திட்டு
    மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
    பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
    ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே. 
  • 17. பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
    ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
    மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
    காலைக்குச் சங்கு கதிரவன் தானே. 
  • 18. கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
    பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
    அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
    எதிரவன் ஈசன் இடமது தானே.
  • 19. உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
    அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார்
    அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
    தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே. 
  • 2. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
    ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
    ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
    ஆகின்ற யோகி அறிந்த அறிவே. 
  • 20. ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
    ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
    ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
    வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.
  • 21. பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
    தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
    பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ
    நீங்கல் கொடானே நெடுந்தகை யானே. 
  • 22. அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
    பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
    நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின்
    வியந்தரு பூரணை மேவும் சசியே. 
  • 23. சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்
    சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
    சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
    சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே. 
  • 24. ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
    நாழிகை யாக நமனை அளப்பர்கள்
    ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
    தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே. 
  • 25. தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
    மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
    வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
    கண்மதி வீழ்வள விற்கண மின்றே.
  • 26. வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
    தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
    மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
    அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 
  • 27. ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
    போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
    காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில்
    ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே. 
  • 28. வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ்
    சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
    ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித்
    தாறுட் கலையுள் அகலுவா வாமே.
  • 29. உணர்விந்து சோணி உறஇனன் வீசும்
    புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
    உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
    உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. 
  • 3. ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
    நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
    பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
    மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.
  • 30. அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
    குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
    சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
    நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. 
  • 31. உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந்
    தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
    தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
    கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. 
  • 32. மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித்
    தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
    ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
    பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே. 
  • 33. விடாத மனம்பவ னத்தொடு மேவி
    நடாவு சிவசங்க நாதங் கொளுவிக்
    கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
    படாதன இன்பம் பருகார் அமுதமே. 
  • 4. பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
    பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி
    ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
    அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே. 
  • 5. எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
    சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
    கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை
    ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே. 
  • 6. எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
    சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
    கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள
    கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே. 
  • 7. எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
    சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
    செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
    நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே. 
  • 8. அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
    தங்கிய தாரகை யாகும் சசிபானு
    பங்கிய தாரகை யாகும் பரையொளி
    தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே. 
  • 9. தரணி சலங்கனல் கால்தக்க வானம்
    அரணிய பானு அருந்திங்கள் அங்கி
    முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
    பிரணவ மாகும் பெருநெறி தானே.