ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே
    அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
    விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்து
    நட்ட மிருக்க நமனில்லை தானே.
  • 10. தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
    ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக்
    கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
    ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே. 
  • 11. ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
    தேனீர் பருகிச் சிவாய நமவென்று
    கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
    வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே. 
  • 12. வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
    காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
    பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
    கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே. 
  • 13. கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
    தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
    காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
    தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே. 
  • 14. தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
    பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
    பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
    மாவினை யாளர் மதியிலுள் ளானே. 
  • 15. மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
    பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
    கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
    எதிர்மலை யாமல் இருந்தனன் தானே. 
  • 16. இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
    இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
    இருந்தனள் மான்ஏர் முகநில வார
    இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே. 
  • 17. பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில்
    வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக்
    கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
    கொழுந்தது வாகும் குணமது தானே.
  • 18. குணமது வாகிய கோமள வல்லி
    மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
    தனமது வாகிய தத்துவ ஞானம்
    இனமது வாக இருந்தனன் தானே. 
  • 19. இருந்த பிராணனும் உள்ளே எழுமா
    பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
    விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
    மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே. 
  • 2. வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
    கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
    விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
    அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே. 
  • 20. மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக்
    கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
    பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
    குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே. 
  • 3. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
    துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
    உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
    கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
  • 4. ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
    வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
    நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
    பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே. 
  • 5. நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
    சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
    மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
    சாவதும் இல்லை சதகோடி ஊனே. 
  • 6. ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
    வானூறல் பாயும் வகையறி வாரில்லை
    வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
    தேனூறல் உண்டு தெளியலு மாமே.
  • 7. மேலைஅண் ணாவில் விரைந்திரு காலிடிற்
    காலனும் இல்லை கதவும் திறந்திடும்
    ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
    பாலனு மாவான் பராநந்தி ஆணையே.
  • 8. நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
    சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
    பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
    சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.
  • 9. தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர்
    நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
    பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
    தேவினை ஆடிய தீங்கரும் பாமே.