ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. போதுகந் தேறும் புரிசடை யானடி
    யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
    ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
    மாதுகந் தாடிடு மால்விடை யோனே.
  • 2. பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
    கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
    முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
    தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே. 
  • 3. வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
    திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
    தருந்தண் முழவங் குழலும் இயம்ப
    இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.
  • 4. செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
    கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
    எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
    இன்பக் கலவி இருக்கலு மாமே. 
  • 5. சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
    ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
    ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
    காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
  • 6. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
    சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
    இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
    பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. 
  • 7. தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
    வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
    தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
    தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே. 
  • 8. காரிய மான உபாதியைத் தான்கடந்
    தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
    வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
    தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.