ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
    காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
    காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
    ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.
  • 2. திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
    அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
    பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
    கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
  • 3. பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
    இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
    மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
    மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.