ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
    ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
    ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
    தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. 
  • 2. ஈசனடியார் இதயங் கலங்கிடத்
    தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
    வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
    நாசம தாயிடும் நம்நந்தி யாணையே. 
  • 3. ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
    ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
    யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
    போன போழுதே புகுஞ்சிவ போகமே. 
  • 4. ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
    சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
    ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
    ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.