ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. அருளால் அரனுக் கடிமைய தாகிப்
    பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
    இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
    தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.
  • 2. உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
    உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
    உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
    கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.
  • 3. மயலற் றிருளற்று மாமனம் அற்றுக்
    கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்
    தயலற் றவரோடுந் தாமேதா மாகிச்
    செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.
  • 4. ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
    வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
    நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
    தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.