
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
பதிகங்கள்

உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.
English Meaning:
The robe is not for SoulThe robe is for the body; not for the Soul
When the body falls, the garb with it falls;
Those that know not that the Soul within the body is real,
Are tossed about like a log caught in wavy sea.
Tamil Meaning:
உடம்பில் பொருத்தப்பட்ட வேடங்கள் உயிர்க்கு உரியன ஆகமாட்டா. அதனால், உடம்பு நீங்கினால் வேடமும் அத னோடே நீங்கிப் போதலன்றி உயிரோடு உடன் செல்லுதல் இல்லை. `உடம்பு, உயிர் சிறிது காலம் தங்கியிருக்கும் ஓர் இடமே` என்னும் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர் கடலில் அகப்பட்ட மரத்துண்டு அதன் அலைகள் பலவற்றாலும் அலைக்கப்படுதல் போலப் பிறவியிற் பட்டு பல்வேறு உடம்புகளால் அலைக்கப்படுவர்.Special Remark:
``உண்மை``, `உளதாதல்` எனத் தொழிலாய் நின்று அதற்குரிய இடத்தைக் குறித்தது.l ``உடம்பில் - துச்சில் இருந்த உயிர்க்கு`` என்ற வாறு, சிறிது காலம் இருத்தலையே இங்கு, ``உண்மை`` என்றார். ``கடலில் அகப்பட்ட கட்டை`` என்பது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அஃது இங்ஙனம் விரிக்கப்பட்டது. இது, `வேடம் மாத்திரமே உயிர் உய்தற்கு வழியாம்` என மயங்கி, ஞானத்தைப் பெறும் வேட்கை இன்றி இருப்போரை நோக்கிக் கூறியது. எனவே, மேற்கூறியவாறு அரசனுக்கு அடிமையாதல் முதலியன உளவாய வழியே வேடம் சிவவேடமாதலைத் தெளிவித்தவாறாயிற்று.இதனால், உடல் உயிர்த் தன்மைகளை இனிதுணர்த்து மாற்றால், மேலது வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage