ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்

பதிகங்கள்

Photo

நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அ தற்றால்
அவமதி தீரும அறும்பிறப் பன்றே.

English Meaning:
Chant Na Ma Si Va and End Birth

Hold the letters, ``Na Ma`` in the tongue
Take the letters ``Si Va`` into your thought;
No more shall you be in existence entangled;
Your goal too shall be reached;
Ignorance will end,
And with it the whirl of births too.
Tamil Meaning:
`சிவாய நம` என்னும் ஐந்தெழுத்தில், `நம, என்னும் உறுப்பினை நா அளவில் கொண்டு, அதனையும் சொல்லாமல் அடக்கி, ஏனை மூன்றெழுத்தை மட்டும் மந்திரமாகக் கொண்டு அறிவாற் கணித்தலாகிய சுத்த மானதமாக உணர்ந்துணர்ந்து நிற்க வினை நீங்கும். வினை நீங்கவே பதிஞானம் இனிது விளங்க ஏனைப் பசுபாச ஞானங்கள் யாவும் அகற்றுவிடும். அவை அற்றுவிடவே பிறவியறுதல் நிண்ணமாம்.
Special Remark:
`மூன்றெழுத்துக்களில் பிறவி நீக்கத்திற்குக் காரணமாதற் சிறப்பு நோக்கி முதல் இரண்டெழுத்தையே கூறினார். அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் ஆயிற்று. பரிசு அது - அப்பரிசு; வினையாகிய பாசம், பாசம் உம்மை, `ஆணவமே யன்றி` என இறந்தது தழுவிற்று அவ மதி - பயன் இல்லாத ஞானம். அவை பாச ஞானமும், பசு ஞானமும் இவற்றை `அவம்` என்றது பெருந்துன்பமாகிய பிறவியை உண்டாக்குதல் நோக்கி, முதலடி உயிரெதுகை.
இதனால், அதிசூக்கும் பஞ்சாக்கரத்தின் சிறப்பு தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.