ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்

பதிகங்கள்

Photo

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.

English Meaning:
Chant Si Va Ya

The Sakti that Grace confers,
And the Lord with Her inseparate,
Together as Siva-Sakti roused Jiva to life;
When you contemplate on Si Va Ya;
Then the Maya within and the rest of Malas three are rid;
That Si Va Ya destroys the hard Karmas too.
Tamil Meaning:
சீவான்மாவாகிய ஒருவனைத் தாயும், தந்தையுமாய்த் தம்மிற் கூடி ஈன்றவர்கள் மறமும், ஆம் இருவகையில் தோன்றும் அருளைத் தருகின்ற மகளிரும் சிவனும் ஆவர். மகளிருள் பிற நிலை யுடைய தாய்க்குத் தோழியாய் நின்றவள் மாயை. (அவளைச் சார்ந்து கன்ம மகளும், அவ்விருவர்க்கும் தலைவியாக ஆணவப் பெண்டும் உள்ளனர். ஆகவே அம்மூவரும் நீக்கத் தக்கவர்களே. அங்ஙனம் அவர்களை நீக்கவல்லது, பாச எழுத்துக்களை நீக்கி `சிவாய` என்று ஓதப்படும் அதிசூக்கும பஞ்சாக்கரமேயாகும்.
Special Remark:
ஆயம் - மகளிர் கூட்டம், திரோதான சத்தி செயல் வகையால் அளவிறந்து நிற்ப, அவற்றோடெல்லாம் அவற்றிற்கு ஏற்ற வகையால் சிவன் கூடி நிற்றலாலும், சீவான்மா முதலில் திரோதான சத்தியாம் பாச அறிவு, பசு அறிவுகளைப் பெற்றுத் தோன்றி வளர்ந்து, முடிவில் அருட் சத்தியால் பதியறிவு விளங்கப்பெற்றுச் சிவசமம் ஆதலின் அச்சத்தி பேதங்களை எல்லாம் ஆயமாக உருவகித்து, `தம்மிற் கூடி ஒருவனை ஈற்றவர் ஆலயமும், அத்தனும்` என்றார். `கூடி` என ஒரு சொல் வருவிக்க. ``ஒருவன்`` என்றது சாதியொருமை ஈனல் கூறவே புறந் தருதலும் கொள்ளப்படும் இங்கு ஈனலும், புறந்தருதலும் அறிவைத் தோற்றுவித்து வளர்த்தலாம். `ஈன்று புறந்தரப்பட்டோர் அளவிறந் தோராயினும் அவரெல்லாம், `சீவர்` எனச் சாதியால் ஒருவரே என்றற்கு ``ஒருவனை ஈன்றவர்`` என்றார். உள்ளுறை அகம்படித் தொண்டு செய்யும் அடித்தோழி உள்ள உறைபவனை, ``உள் உறை`` என்றார். ``திரிமலம் தீர்ந்து`` எனவும், ``அரு வினை தீர்ப்பதும்`` எனவும் பின்னர் வருதலால் மாயையோடு ஏனை ஆணவ கன்மங்களும் திரோதான சத்தியின்கீழ் இருந்தமை பெறப் பட்டது. ``தீர்ப்பதும்`` உம்மை சிறப்பு. ஆணவ மலம் பரிபாகம் ஆய வழியே வினை நீங்குதலும், வினை நீங்கவே, மாயையும் உடன் நீங்குதலும் நிகழ்தல் பற்றி வினை நீங்கவே, மாயையும் உடனஅ நீங்குதலும் நிகழ்தல் பற்றி வினை தீர்த்தலையே சிறப்பாக எடுத்துக் கூறினார்.
இதனால், திருவைந்தெழுத்தில் பாச எழுத்துக்கள் நீக்கற்பாலனவாதல் கூறப்பட்டது.