ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 10. திருநீறு

பதிகங்கள்

Photo

நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.

English Meaning:
Power of Holy Ashes

The sacred ashes of Siva
Who has bones for His garland
Are an armour indeed impregnable;
For them who in joy smear it
Karmas take flight,
And Siva-state comes seeking;
And they shall reach His handsome Feet.
Tamil Meaning:
அந்தண வேடத்துள் முதன்மை பெற்று விளங்கும் முப்புரிநூல், சிகை என்பவற்றது உண்மை இன்ன என்பதை முழு மூடராயுள்ளோர் சிறிதும் அறியமாட்டார். அவற்றின் உண்மையாவன யாவை எனின், `முப்புரிநூல்` என்பது வேதத்தின் முடிநிலைப் பகுதியாகிய உபநிடதங்களும், `சிகை` என்பது அவற்றின் பொரு ளுணர்வுமாம், நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந் தணர்கள், `பரமான்மா, சீவான்மா` என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதேயாம். வாளாநூலையும், சிகையையும் பொருந்த வைத்துக் கொள்வதனால் மட்டுமன்று.
Special Remark:
இதனை இங்குக் கூறவே, `வேத வேதாந்தங்களை நன்கு ஓதி உணர்ந்தவர் திருநீற்றின் பெருமையை உணர்வாராகலான், அதனை அணிதலை ஒழியார்` என்பது குறிப்பாயிற்று. ``வேதத்தில் உள்ளது நீறு``l என ஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் முன் பலரும் அறிய அருளிச் செய்தமை இங்கு ஒரு தலையாக உணரற் பாற்று. `சபாலம்` என்னும் உபநிடதம் சிறப்பாகத் திருநீற்றின் பெருமை உணர்த்துவதாயுள்ளது. இவற்றால் `திருநீறு அல்லது விபூதி` என நீவிர் புகழ்ந்துரைக்கும் பொருள் நறுமணம் முதலிய நலம் யாதுமில்லாத வெறும் சாம்பல்தானே என இகழ்தல் பேதமைப் பலது என்பது போந்தது. அதனால், ``நூலும், சிகையும் அறியார் நின்மூடர்கள்`` என்றது போலவே, `நீற்றது உண்மையும் அறியார் நின்மூடர்கள்` என ஓதுதலும் கருத்தால் பெறப்படும். நீற்றது உண்மையை இவர். மேல் ``கவசத் திருநீறு`` என்பனால் குறித்தார். திருஞானசம்பந்தர் ``பராவண மாவது நீறு``l என இனிது விளங்க அருளிச் செய்தார். இருவரும் முறையே, ``பூசி மகிழ்வரே யாமாயின் தங்கா வினைகளும்`` எனவும்``பாவம் அறுப்பது நீறு``l எனவும் ஓதியருளினார். இவ்விடங்களில், `திருநீறாவது இறைவனது திருவருளே` என்பது தெற்றென விளங்கி நிற்கின்றது` இங்ஙனம்.
``தலைகல னாகஉண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்;
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்`` 3
என்றாற்போலவரும் சுருதிகளை யுணராமையால்,
``பூசுவதும் வெண்ணீறு; பூண்பதுவும் பொங்கரவம்`` l
``கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை`` 8
என்று புறச்சமயத்தார் இகழ்தலேயன்றி, `வேதத்தை ஓதுதலால் வேதியர் எனப்படுகின்றேம்` எனக் கூறிக் கொள்வாருள்ளும் சிலர் திருநீற்றை `சாம்பல்` என்று இகழ்ந்தொக்குதல் அவருக்குண்டான சாபக்கேடே என்பது,
``பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ எனவணங்கிப்
பெரிது போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண் டிகையினையும்
இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந்நாளும் பிறந்திறந்து
கதியு றாது
பாசமதி னிடைப்பட்டு மறையுரையா நெறியதனிற்
படுதி ரென்றான்``*
என்னும் கந்தபுராணத்தால் அறியப்படும். படவே, `அந்தணர்` என்பாருள்ளும் சிலர் இத்தன்மையராய் இருத்தலைத் திருவுளத்துட் கொண்டு அவரது இயல்பினை விளக்குதற்கே இம்மந்திரத்தை இவ்வதிகாரத்தில் நாயனார் அருளிச் செய்தார் என்பது விளங்கும். சிவபிரானது விகிர்த வேடத்தின் பெருமைகள் பலவும் அறிதற்கு மிக அரியன என்பதை உணர்த்தவே,
``சடையும் பிறையும சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்தொலோ``*
என்றார் போலப் பலவிடத்தும் அருளிச் செய்தார். இன்னோரன்ன திரு வருண்மொழிகட்குப் பின்னும் திருநீற்றிற்கு வேறாகச் சிலர் சில சமயக் குறிகளைப் படைத்துக் கொண்டது, மேற்காட்டிய சாபத்தின் வலி யெனவே வேண்டும் என்க.
அந்தணர் பரம், உயிர் இரண்டும் ஓர் ஒன்றாகப் பார்ப்பார் எனில், அஃது ஓங்காரம் ஓதிலேயாம்` என உம்மையும் ஆக்கமும் விரித்து மாற்றிமுடிக்க. பார்த்தல் - ஆராய்ந்துணர்தல். ``ஓர் ஒன்றாக`` என்றது `நுனித்து` என்றவாறு ``ஓங்காரம்`` என்றது, வேதத்தில் அது முதலாகத் தொடங்கிச் செல்லும் மந்திரங்கள் அமைந்த பாகத்தைக் குறித்தது. மந்திர பாகத்தின் உண்மையை உணர்த்துவனவே உப நிடதங்களாதலின், அம்மந்திர பாகத்தை முன்னர் நன்கு ஓதிப் பின்னர் அவற்றின் உண்மைகளை உபநிடதங்களில் உணர்தல் வேண்டும் என்றற்கு, ``ஓங்காரம் ஓதிலே`` என்றார். எனவே, ``ஓதி அவற்றை உப நிடதங்களில் உணரிலே` என்க. கூறுதலும் கருத்தாயிற்று. ``நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்`` என மேல் அந்தணர் ஒழுக்கத்தில் (229) கூறிய நாயனார் அதனை இங்கும் மறித்தும் கூறியது பெரிதும் வலியுறுத்தற் பொருட்டாயிற்று. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், `பிறப்பால் உயர்ந்தோர்` எனப்படுகின்ற அந்தண ராயினும் அவர் உயர்வெய்துதல் திருநீற்றாலே என்பது கூறப்பட்டது.