ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 10. திருநீறு

பதிகங்கள்

Photo

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

English Meaning:
Chant ``Aum`` and unite in Param

Fools know not what thread and tuft are;
Thread is but Vedanta, and tuft is Jnana;
Brahmins true who live in accord thus,
Shall see Jiva in Siva uniting;
Chant sacred mantra ``Aum``
And lo! the Two merge forever in One.
Tamil Meaning:
யாவரேனும் எலும்புக் கூட்டைத் தோளிலே கொள்ளும் சிவபெருமான் பூசுவதும், அணிந்தோர் யாவர்க்கும் கவசமாய் நிற்பதும் ஆகிய திருநீற்றை அதன் வெள்ளொளி மிக விளங் குமாறு பூசி மகிழ்ச்சியுறுவராயின், அவரிடத்து வினைகள் தங்கியிரா. சிவகதி கூடும். சிவனது அழகிய திருவடியையும் அவர் அடைவர்.
Special Remark:
``கங்காளன் பூசும்`` என்றது, `எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பினது. சிவநெறியாளர்க்குத் திருநீறே கவசமும், திருவைந் தெழுத்தே அதிதிரமுமாதலை,
``வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே`` *
என ஞானசம்பந்தரும் குறிப்பால் அருளிச் செய்தமை காண்க. இக் கவசமும், அத்திரமும் வினையாகிய பகை வந்து தாக்காமற் காப்பதும், அப்பகையை அழிப்பதும் ஆதலை இம்மந்திரத்தாலும் இங்குக் காட்டிய தேவாரத்தாலும் அறிக. அவை பிற கவசங்களாலும், அத் திரங்களாலும் இயலாமையும் உணர்க. ``சிவகதி`` என்றது பத முத்தி அபர முத்திகளையும், `திருவடி சேர்தல்` என்பது பர முத்தியையும் குறித்தனவாம். `மகிழ்விரேயாமாகில் சேர்விரே` என்பதும் பாடம்.
இதனால், திருநீற்றது சிறப்பு வகுத்துணர்த்தப் பட்டது. இம்மந்திரம் சிவ பிரதிகளில் இவ்வதிகாரத்த்து இரண்டாம் மந்திர மாகக் காணப்படுதல் பொருந்தவில்லை.