ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அமுதூறு மாமழை நீரத னாலே
    அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
    கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
    அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. 
  • 2. வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
    உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
    நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
    கரையில்லை எந்தை கழுமணி யாறே.