ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
    முடிசேர் மலைமக னார்மக ளாகித்
    திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
    படியார அற்சித்துப் பத்திசெய் தாளே. 
  • 2. திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
    அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
    புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
    பரிவொடு நின்று பரிசறி வானே. 
  • 3. ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
    ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
    ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
    வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. 
  • 4. தாங்கி இருபது தோளுந் தடவரை
    ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
    ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
    நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே. 
  • 5. உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
    அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
    செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
    மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. 
  • 6. ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
    வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
    நாடி இறைவா நமஎன்று கும்பிட
    ஈடில் புகழோன் எழுகவென் றானே.