ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்

பதிகங்கள்

Photo

அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.

English Meaning:
Cosmic Bindu and Micro-Cosmic Bindu Are Inseparate

Two the swans on the river bank (of life)
The two swans separation know not,
If one, Jiva, says he is by himself,
Then that foolish swan, Grace receiveth not.
Tamil Meaning:
இங்கு ``ஆறு`` என்றது பிராணன் இயங்கும் வழி யினை. ``அதன் கரையில் உள்ள இரு அன்னங்கள்`` என்றது, அந்தப் பிராணனை ஒட்டி நிற்கின்ற `சிவன், சீவன்` என்னும் இருவரையும். அவ்வன்னம் இரண்டும் என்றும் இணைந்து நிற்றலி னின்றும் நீங்கித் தனித்தனியே பிரிதல் இல்லை. அவற்றுள் ஒன்று அறிவுமிக்கது. ஆதலின் அது தனியே பிரிந்து நிற்பினும் யாதொன் றினை இழத்தல் இன்றி, இனிது வாழும். மற்றொன்று அறிவு குறைந்தது ஆதலால் அது பிரிந்து தனி நிற்பின் எந்தப் பயனையும் பெறாது துன்பத்தில் ஆழும் என்றது சிவ சீவர்களது இயல்பினை விளக்கியதாம்.
Special Remark:
``அழகிய சிறகையுடைய இரு பறவைகள் இணை பிரியாதவை; ஒரு மரத்தில் வாழ்கின்றன. அவற்றுள் ஒன்று அம் மரத்தின் பழத்தை உண்கின்றது. மற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கின்றது`` என்னும் உபநிடதப் பொருள் இங்கு ஒப்பிடத்தக்கது. l
மூன்றாம் அடியில், `தனி நிலை` என்பது எதுகை நோக்கி, ``தன்னிலை`` என விகாரமாயிற்று. ``தன்னந் தனிநிலை தனி ஒன்று`` என்றதனை, `தனி ஒன்று தன்னந் தனி நிலையையுடையது` என மாற்றிப் பயனிலை வருவித்து உரைக்க. `உடையது` என்பது `உடையதாதல் இயலும்` என்பதாம். ``பின்னர்`` என்பது, `மற்றொன்று` என்றபடி. மற்றொன்றாகிய மட அன்னம் அது என்றக்கால் பேறு அணுகாது` என இயைக்க. மடமை - அறியாமை; `சிற்றறிவு` என்பதாம். அது என்றல் - வேறொன்றாகிய `அந்த அன்னத்தைப் போல நானும் தனித்திருப்பேன்` என்று நினைத்தல்.
இதனால், பிராணனாய் நிற்கும் பசு தான் பதியை விட்டுத் தனிநிற்றல் ஆகாமை விளக்கப்பட்டது.