ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 15. போசன விதி

பதிகங்கள்

Photo

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.

English Meaning:
Lord cares for Siva Jnanis

Wherever it be
The food that is to them offered,
The Lord`s devotees receive as sweet ambrosia;
Even as those who own a lone plot of land
Will unhappy be,
If that land uncared for lies.
Will they remain;
Seeking Siva and Siva alone
Will they engrossed ever be.
Tamil Meaning:
ஒரு வயலையே தங்களுடையதாகக் கொண்டிருப் பவர் அது தரிசாய்க் கிடந்தால் விளைவு ஒன்றையும் பெறமாட்டார். அது போலச் சிவனடியார்கள் `அடியார்களுக்கு` என்று நினைத்துச் சமைத்த உணவையே, `இஃது எட்டுத் திக்கினையும் நிறைவு செய்யும் அமுத மாகும்` என விரும்பி உண்பதன்றி, `தமக்கும் தம் கேளிர் கிளைஞர் கட்குமே` என்று நினைத்துச் சமைத்த உணவை உண்ணமாட்டார்கள்.
Special Remark:
அவ்வாறு சமைத்து அடியவர் வரின் மகிழ்வுடன் வரவேற்று உண்பிப்பவர் உலகில் மிகச் சிலரே யாகையால் அவரை ஒருவனுக்கு அமைந்த ஒரே வயலாகவும், அவரிடத்தன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணார் சிவனடியார் ஆகலின் அவரை ஒரு வயலையே உடைய நிலக்கிழாராகவும் கூறினார். `அந்த ஒரு சிலர் இல்லையேல் சிவனடியார்க்கு உணவில்லை` என்பது பின்னிரண் டடிகளில் ஒட்டணி வகையால் கூறினமையின் இங்கு இவ்வாறு உரை கூறப்பட்டது.
`இறைவன் அடியவர்க்கு (என்று) அட்ட அடிசிலை அவ்வடியார் எட்டுத் திசையும் (விரும்பும்) அமுது என்று எதிர் கொள்வர்` என்க. அடியவரது இயல்பிற்கு ஏற்ப விளைவை ஆகு பெயரால் ``விருப்பு`` என்றார். அன்பில்லாதார் அறஞ்செய்தலை விரும்பார் ஆகலின் அறவோர் அவர்பால் உண்ணார் என்க.
அதனால், `சிவனடியார் தம்பால் அன்புடையாரிடத்தே யன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணலாகாது` என்பது அவரது இயல்பின்மேல் வைத்துக் கூறப்பட்டது.