ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்

பதிகங்கள்

Photo

தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது
அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக இழிவற்ற யோகரே.

English Meaning:
Only Jnana-in-Yoga Leads to Sarupa State

The State of Sarupa is, no doubt, reached
Through the eight-fold yoga way;
But unless it be Sanmarga-in-Yoga,
The Sarupa state cannot be;
The yoga way but leads to bodily Siddhis diverse;
But for the Sarupa state to realize,
None these but the pure way of Jnana-in-Yoga.
Tamil Meaning:
சாலோக சாமீபங்கட்கு மேலே பொருந்தியுள்ள சாரூபம் அட்டாங்க யோகங்களுள் எட்டாம் நிலையாகிய சிவ சமாதி கைவரப் பெற்றோர்க்கே கிடைப்பதாம். அந்தச் சாரூப நிலையினராய முதிர்ந்த யோகியர்க்கு அல்லது அதற்கு மேலே உள்ள சன்மார்க்க மாகிய ஞானம் உண்டாக மாட்டாது. மேலும் அட்ட அங்கங்களும் நிரம்பிய இந்த யோகத்தாலே காய சித்தியும் உண்டாகும். அதனால், இம்மையில் காய சித்தியும், மறுமையில் சாரூபமும் பெறுபவரே குறைவற்ற யோகத்தைப் பெற்றவராவர்.
Special Remark:
`எட்டாம் யோகத்தால்` எனவும், `அங்கத்தால்` எனவும் உருபு விரித்துக் கொள்க. ``அங்கம்`` என்றது அவற்றை முற்ற உடைய யோகத்தை குறித்த ஆகுபெயர். ``தனில்`` என்றது, யோகத்தையே குறித்தது, `ஆவர்` என ஓதற்பாலதனை,``ஆக`` என விதியாக ஓதினார். அன்றி `ஆவர்` என்றே பாடம் ஓதலுமாம்.
இதனால், சாரூபம் வருமாறும், அவ்வாற்றானே பிற பயன்கள் கிடைத்தலும் கூறப்பட்டன. ``சன்மார்க்கம் தனில் அன்றிக் கை கூடாது`` என்றதனால், `சரியை முதலிய மூன்றற்கும் உண்மைப் பயன் ஞானமே` என்பதும், `சாலோகம் முதலியவை இடைநிலைப் பயன்களே` என்பதும் போந்தவாறு அறிந்துகொள்க.