ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்

பதிகங்கள்

Photo

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

English Meaning:
He is the Finite Goal

He is Param that is reached
By those who desire Him,
Leaving their own desire behind;
He is Lord of Fore-Head Eye
Whom the learned who have learned all,
Still learn about;
He is the Transcendental Light
Whom those who have bonds none Surround;
He is the One,
Whom those who have reached,
Have ceased to prattle about.
Tamil Meaning:
பரத்தை எய்துதலாகிய அதீத நிலையை அடைந் தவர்களே உலகர் செய்யும் செயல்களினின்றும் முற்றும் நீங்கினவராவர்.
Special Remark:
எனவே, `ஏனையோர் பயிற்சி வயத்தால் ஒரோ ஒருகால் அச்செயல்களைத் தம் இழப்பில் நின்று செய்யினும் செய்வர்` என்பதாம். ``அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை``3 என அப்பர் குறிப்பு மொழி -யால் அருளிச்செய்தது பரத்தை எய்தினோர் நிலையையே ஆகும்.
பரத்தின் சிறப்பை இதனுட் பலவாறாக எடுத்தோதினார். பரத்தை, ``பரம்பொருள்`` என்றார், ``கண்ணுதல், சோதி`` எனக் குறித்ததும் அதனையே. இவை பொருட் பின்வருநிலையணி. கற்றல், இங்கு ஆசிரியர்பாற் கேட்டல். கருதுதல், சிந்தித்தல். ``சுற்றம் அற்றவர்`` என்பதில் `சுற்றம்` என்பது அம்முக்குறைந்து நின்றது. அவர் முற்றத் துறந்தோராவர் இங்ஙனம் கூறியது தெளிவெய்தினோரை. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, ``உற்றவர்கள்`` என்பதனோடு கூட்டியுரைக்க.
இதனால், பரமுத்தியின் சிறப்பு வகுத்தோதி முடிக்கப்பட்டது.