
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி
பதிகங்கள்

சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.
English Meaning:
The Four Ordinations in Kriya WorshipIn Kriya worship are sacraments four;
Samaya sacrament prepares heart to be a Tabernacle of God;
Visesha sacrament installs the Faith firm;
Nirvana helps realize the Truth or Faith;
Abhisheka confers the state of Samadhi Supreme.
Tamil Meaning:
தீக்கைகளில் சமயதீக்கை சிவனை மனத்தால் நினைக்கப் பண்ணும். விசேடதீக்கை சைவ சமய மந்திரங்கள் பல வற்றை பல முறையில் பயிலப் பண்ணும். மூன்றாவதாகிய நிருவாண தீக்கை சைவ சமயத்தின் முதற் பொருளுளாகிய சிவனது பெருமையை உள்ளவாறுணர்ந்து, `அவனே முதற்கடவுள்` எனத் தெளியப் பண்ணும். சைவ அபிடேகம் தான் சிவமாயே நின்று பிறர் சிவனது திருவருளைப் பெறும் வாயிலாய் விளங்குப் பண்ணும்.Special Remark:
இங்கு, ``கிரியை`` என்றது, சிவனது கிரியா சத்தியின் செயற் பாடாகிய தீக்கையை. இதனை முதலில் வைத்து, எல்லா வற்றோடும் கூட்டி உரைக்க. மனத்தைக் கோயிலாக்குதலாவது, சிவனைப் புறத்தில் பல வடிவங்களில் கண்டு தொழுதல் மாத்திரையான் அன்றி, தியானிக்கும் நெறியைத் தருதல். இதனை `அனுட்டானம்` எனப. பல மந்திரங்களைப் பல வகையில் பயிலல் எனவே, `கிரியை, யோகம்` என்னும் இரண்டும் அடங்கின. தான் சிவமாய் நின்று பிறரும் திருவருள் பெறுதற்கு வாயிலாவது ஞானா சிரியனாய் விளங்குதலாம். `சரியை முதலிய நான்கும் சமயம் முதலிய தீக்கைகளால் இங்ஙனம் ஒன்றின் ஒன்று உயர்ந்த நிலையை உடைய ஆதலின், பின்னர் அவற்றால் விளையும் பயனும் அன்னவாயின` என்றவாறு.இதனால், மேற்கூறிய நெறிகட்கும், அவற்றின் பயன்கட்கும் உளவாய இயைபு கூறப்பட்டது. அபிடேகம் பெறாதோரும் ஞானியராய்ச் சாயுச்சம் பெறுவராயினும், அவரினும் ஆசிரியராய் விளங்கினோர் பிறரையும் உய்விக்கும் சிறப்புடையர் என்றற்கு அவரையே சாயுச்சம் பெறுவார்போலக் கூறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage