ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி

பதிகங்கள்

Photo

சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.

English Meaning:
The Four Ordinations in Kriya Worship

In Kriya worship are sacraments four;
Samaya sacrament prepares heart to be a Tabernacle of God;
Visesha sacrament installs the Faith firm;
Nirvana helps realize the Truth or Faith;
Abhisheka confers the state of Samadhi Supreme.
Tamil Meaning:
தீக்கைகளில் சமயதீக்கை சிவனை மனத்தால் நினைக்கப் பண்ணும். விசேடதீக்கை சைவ சமய மந்திரங்கள் பல வற்றை பல முறையில் பயிலப் பண்ணும். மூன்றாவதாகிய நிருவாண தீக்கை சைவ சமயத்தின் முதற் பொருளுளாகிய சிவனது பெருமையை உள்ளவாறுணர்ந்து, `அவனே முதற்கடவுள்` எனத் தெளியப் பண்ணும். சைவ அபிடேகம் தான் சிவமாயே நின்று பிறர் சிவனது திருவருளைப் பெறும் வாயிலாய் விளங்குப் பண்ணும்.
Special Remark:
இங்கு, ``கிரியை`` என்றது, சிவனது கிரியா சத்தியின் செயற் பாடாகிய தீக்கையை. இதனை முதலில் வைத்து, எல்லா வற்றோடும் கூட்டி உரைக்க. மனத்தைக் கோயிலாக்குதலாவது, சிவனைப் புறத்தில் பல வடிவங்களில் கண்டு தொழுதல் மாத்திரையான் அன்றி, தியானிக்கும் நெறியைத் தருதல். இதனை `அனுட்டானம்` எனப. பல மந்திரங்களைப் பல வகையில் பயிலல் எனவே, `கிரியை, யோகம்` என்னும் இரண்டும் அடங்கின. தான் சிவமாய் நின்று பிறரும் திருவருள் பெறுதற்கு வாயிலாவது ஞானா சிரியனாய் விளங்குதலாம். `சரியை முதலிய நான்கும் சமயம் முதலிய தீக்கைகளால் இங்ஙனம் ஒன்றின் ஒன்று உயர்ந்த நிலையை உடைய ஆதலின், பின்னர் அவற்றால் விளையும் பயனும் அன்னவாயின` என்றவாறு.
இதனால், மேற்கூறிய நெறிகட்கும், அவற்றின் பயன்கட்கும் உளவாய இயைபு கூறப்பட்டது. அபிடேகம் பெறாதோரும் ஞானியராய்ச் சாயுச்சம் பெறுவராயினும், அவரினும் ஆசிரியராய் விளங்கினோர் பிறரையும் உய்விக்கும் சிறப்புடையர் என்றற்கு அவரையே சாயுச்சம் பெறுவார்போலக் கூறினார்.